தமிழகத்தில் 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி; மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி


தமிழகத்தில் 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி; மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 12 Jan 2021 10:30 PM GMT (Updated: 12 Jan 2021 10:17 PM GMT)

தமிழகத்தில் 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் பழனிசாமி மதுரையில் தொடங்கி வைக்கிறார்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 16-ந் தேதியன்று தொடங்கி வைக்கிறார். அதற்காக இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16-ந் தேதி மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நிரல் இன்னும் அரசுக்கு வரவில்லை.

அவரது நிகழ்ச்சிக்கு ஏற்ப முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கான நேரம் ஏற்பாடு செய்யப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story