“நானும் தடுப்பூசிப் போட்டுக்கொள்கிறேன்“: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்


“நானும் தடுப்பூசிப் போட்டுக்கொள்கிறேன்“: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 20 Jan 2021 7:28 AM GMT (Updated: 20 Jan 2021 7:28 AM GMT)

மருத்துவ துறையினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “  நாளை மறுநாள் ( வெள்ளிக்கிழமை) நான் கொரோனே தடுப்பூசி செலுத்திக்கொள்கிறேன். 

ஒரு அமைச்சராக இல்லாமல் மருத்துவராக ஐஎம்ஏ உறுப்பினராக நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன். மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் வகையில் நானே கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள உள்ளேன்” என்று தெரிவித்தார். 


Next Story