அண்ணா நினைவு தினத்தில் அவரை போற்றி வணங்குகிறேன்: முதல்வர் பழனிசாமி டுவிட்


அண்ணா நினைவு தினத்தில் அவரை போற்றி வணங்குகிறேன்: முதல்வர் பழனிசாமி டுவிட்
x
தினத்தந்தி 3 Feb 2021 3:35 AM GMT (Updated: 3 Feb 2021 3:35 AM GMT)

அண்ணா நினைவு தினத்தில் அவரை போற்றி வணங்கி மகிழ்கிறேன் என முதல்வர் பழனிசாமி தனது டுவிட் பதிவில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 52-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 

தமிழ் மொழி, தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ்! தமிழ்! என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணா அவர்களை அவர்தம் நினைவு தினத்தில், போற்றி வணங்கி மகிழ்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “தமிழை சுவாசித்தவர்;தமிழர்களை நேசித்தவர்;ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர்;  கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்! தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தில், எனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 


Next Story