தமிழக மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் எங்களிடம் வரலாம்:கமல்ஹாசன்
தமிழக மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் எங்களிடம் வரலாம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - நல்ல விஷயங்கள் எங்கு இருந்தாலும் தேடி எடுத்துக்கொள்வோம். நல்லவர்கள் எங்களுடன் சேர வேண்டும். கதவுகள் திறந்தே இருக்கிறது. தமிழக மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் எங்களிடம் வரலாம்.
கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் கூடி வருகின்றன. திமுகவில் இருந்தும் பேச்சுவார்த்தை நடந்தது. தூது வருவதை கருத்தில் கொள்ள முடியாது. தலைமை மட்டத்தில் வந்தால்தான் உறுதி . ரஜினி வாய்ஸ் கொடுக்க நினைத்தால் அவர்தான் கொடுக்க வேண்டும். வாய்ஸ் என்பது கேட்டு பெறுவதல்ல. கூட்டணிக்கு தான் பேச்சுவார்த்தை.” என்றார்.
Related Tags :
Next Story