தி.மு.க.வின் வெற்றியை தடுக்க சூழ்ச்சி நடக்கிறது: ஸ்டாலின்


தி.மு.க.வின் வெற்றியை தடுக்க சூழ்ச்சி நடக்கிறது:  ஸ்டாலின்
x
தினத்தந்தி 25 Feb 2021 3:41 PM GMT (Updated: 25 Feb 2021 3:41 PM GMT)

தி.மு.க.வின் வெற்றியை தடுக்க சூழ்ச்சி நடக்கிறது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

கோவை, கொடிசியாவில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் வெற்றிவேல், வீரவேல் என தமிழில் கூறி பிரசாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி.  அவர் பேசும்போது, தி.மு.க.வினுடையது ஊழல் ஆட்சி.  தி.மு.க. தனது தொன்மையை இழந்து விட்டது.  ஊழல் செய்வதற்காக தனது மூளையை தி.மு.க. பயன்படுத்துகிறது.  தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்களுக்கு தொல்லைகள் ஏற்படுகின்றன.

எதிர்க்கட்சிகளுக்கு சுயலாபம் ஒன்றுதான் இலக்கு.  தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியால் தமிழகத்துக்கு நல்லாட்சியை தர முடியாது. சட்டை பையை நிரப்பி கொள்ளவே, தி.மு.க. - காங். ஆட்சியை பிடிக்க நினைக்கிறது என பேசினார்.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறும்பொழுது, தி.மு.க.வின் வெற்றியை தடுக்க சூழ்ச்சி நடக்கிறது என தெரிவித்து உள்ளார்.  தி.மு.க. வெற்றியை எதிர்ப்பது அ.தி.மு.க. மட்டுமல்ல, பா.ஜ.க.வும்தான் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story