‘‘தொழிலாளர்களின் நலன் காக்க துணை நிற்போம்’’ மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு
நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றும் ‘‘தொழிலாளர்களின் நலன் காக்க துணை நிற்போம்’’ மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துகள் வருமாறு:-
பட்டாசு ஆலையில் உயிரிழப்புகளும், பலதரப்பட்ட ஆலைகளின் கதவடைப்புகளும், தொழிலாளர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகின்றன.
உற்பத்தி-பொருளாதார வளர்ச்சி-நாட்டின் முன்னேற்றம் இவற்றில் முக்கிய பங்காற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட தேசிய தொழிலாளர் பாதுகாப்பு நாளான மார்ச் 4-ந்தேதி (நேற்று) வலியுறுத்துகிறேன். தொழிலாளர் நலன் காக்க எந்நாளும் துணை நிற்போம்.
இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story