முதலமைச்சர் பழனிசாமி இன்று கொரோனா தடுப்பூசி போட்டு கொள்கிறார்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்கிறார்.
சென்னை
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதுவரை மொத்தம் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 9.15 மணிக்கு கொரோனா தடுப்பூசி போட்டுகொள்கிறார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story