முதலமைச்சர் பழனிசாமி இன்று கொரோனா தடுப்பூசி போட்டு கொள்கிறார்!


முதலமைச்சர் பழனிசாமி இன்று கொரோனா தடுப்பூசி போட்டு கொள்கிறார்!
x
தினத்தந்தி 11 March 2021 3:25 AM GMT (Updated: 11 March 2021 3:25 AM GMT)

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்கிறார்.

சென்னை

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதுவரை மொத்தம் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 9.15 மணிக்கு கொரோனா தடுப்பூசி போட்டுகொள்கிறார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story