டி.ஆர்.பாலு - அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதி


டி.ஆர்.பாலு - அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு  கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 14 April 2021 9:42 AM GMT (Updated: 14 April 2021 9:42 AM GMT)

திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் எம்பியுமான டி.ஆர்.பாலுவுக்கும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவும், திமுக வேட்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், தீவிர கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர் டிஸ்சார்ஜ் ஆகிறார்.

இந்நிலையில், திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் எம்பியுமான டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவும் அத் தொகுதியின் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி அவர் ஒரு வாரமாக வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

Next Story