அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் - தமிழக அரசு


அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் - தமிழக அரசு
x
தினத்தந்தி 15 April 2021 6:08 AM GMT (Updated: 15 April 2021 6:25 AM GMT)

கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தல் இன்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அடுத்த 8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரியர் தேர்வு ரத்து அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

அரியர் மாணவர்களுக்கு மே 17ஆம் தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.

Next Story