தமிழர்களின் குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்' - முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து


தமிழர்களின் குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும் -  முதல்வர் ஸ்டாலினுக்கு  நடிகர் சூர்யா வாழ்த்து
x
தினத்தந்தி 7 May 2021 5:46 AM GMT (Updated: 7 May 2021 5:46 AM GMT)

தமிழக முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள மு.க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.


தமிழக  முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள மு.க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். சூர்யா வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது:-

முடித்தே தீர வேண்டிய பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மக்களின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

சுவாசிப்பதற்கு உயிர் காற்று கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்தப் பேரிடர் காலத்தில் நீங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி அடையும் என்று நம்புகிறோம். தங்களுக்கும், ஆற்றலும் அனுபவம் நிறைந்த மாண்புமிகு தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்”என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘முடியுமா நம்மால்’ என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். முடித்தே தீருவேன் என்பது வெற்றிக்கான தொடக்கம் என்ற கருணாநிதியின் வாசகத்தையும் மேற்கோள் காட்டியுள்ளார்.


Next Story