தமிழகத்தில் ஒரே நாளில் 29,272-பேருக்கு கொரோனா- 298 பேர் உயிரிழப்பு


தமிழகத்தில் ஒரே நாளில் 29,272-பேருக்கு கொரோனா- 298 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 11 May 2021 2:28 PM GMT (Updated: 11 May 2021 2:28 PM GMT)

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,272- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,272- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை  கூறியிருப்பதாவது:- “தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 29,272- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 19,182- பேர் குணம் அடைந்துள்ளனர். 

தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 298- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 78 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.  

கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 62 ஆயிரத்து 181- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் இன்று 7,466- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கண்டறிய ஒரே நாளில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 111- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 


Next Story