போலீசார் தாக்கியதால் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி
சேலத்தில் போலீசார் தாக்கியதால் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் முருகேசன் என்பவர் தருமபுரிக்கு மது வாங்க சென்று விட்டு திரும்பிய போது ஏத்தாப்பூர் அருகே சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள், முருகேசனை மடக்கி லத்தியால் அடித்துள்ளனர்.
இதனால் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,இன்று காலை முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து,முருகேசனின் உயிரிழப்புக்கு காரணமான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டார்.அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், காவலர் தாக்கி பலியான முருகேசனின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவலர் தாக்கி விவசாயி பலியான துயரச்செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story