பள்ளிகளும், அணைகளும் தந்து தமிழ் சமுதாயத்தை தலைநிமிர செய்தவர் கர்மவீரர் காமராஜர் - எடப்பாடி பழனிசாமி


பள்ளிகளும், அணைகளும் தந்து தமிழ் சமுதாயத்தை தலைநிமிர செய்தவர் கர்மவீரர் காமராஜர் -  எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 15 July 2021 5:38 AM GMT (Updated: 15 July 2021 5:39 AM GMT)

பள்ளிகளும், அணைகளும் தந்து தமிழ் சமுதாயத்தை தலைநிமிர செய்தவர் கர்மவீரர் காமராஜர் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் பிறந்த நாளான இன்று, 'கல்வி வளர்ச்சி தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

காமராஜரின் 119 வது பிறந்த நாள் விழா அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜரின் உருவச் சில்லைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த விழாவில், டி.ஆர்.பாலு எம்.பி, தயாநிதி மாறன் எம்.பி, அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் இதில் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கல்வியும், வேளாண்மையுமே நாட்டை வளர்ச்சி பாதையில் பெருமை அடைய செய்யும் எனும் தனது தொலைநோக்கு பார்வையால் எண்ணற்ற பள்ளிகளும், அணைகளும் தந்து தமிழ் சமுதாயத்தை தலைநிமிர செய்த பெருமைக்குரியவர்,  கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Next Story