புனேவில் இருந்து சென்னைக்கு 8 லட்சத்து 61 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன


புனேவில் இருந்து சென்னைக்கு 8 லட்சத்து 61 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன
x
தினத்தந்தி 24 July 2021 10:51 PM GMT (Updated: 24 July 2021 10:51 PM GMT)

புனேவில் இருந்து சென்னைக்கு 8 லட்சத்து 61 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன.

ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 93 லட்சம் ‘கோவேக்சின்’ மற்றும் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் வந்து உள்ளன.

இந்தநிலையில் புனேவில் இருந்து விமானத்தில் 41 பெட்டிகளில் 4 லட்சத்து 81 ஆயிரத்து 310 ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் சென்னை வந்தன. அவை விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதே விமானத்தில் 32 பெட்டிகளில் வந்த 3 லட்சத்து 80 ஆயிரம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள், மத்திய தொகுப்பிற்காக பெரியமேட்டில் உள்ள மத்திய கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இவை அனைத்தும் தேவைப்படும் மாவட்டங்களுக்கு உடனே பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story