விவேகானந்தர் மண்டபத்திற்கு நடைபாலம் அறிவிப்பு: தமிழக அரசுக்கு குமரி அனந்தன் பாராட்டு


விவேகானந்தர் மண்டபத்திற்கு நடைபாலம் அறிவிப்பு: தமிழக அரசுக்கு குமரி அனந்தன் பாராட்டு
x
தினத்தந்தி 30 Aug 2021 10:20 PM GMT (Updated: 30 Aug 2021 10:20 PM GMT)

விவேகானந்தர் மண்டபத்திற்கு நடைபாலம் அறிவிப்பு: தமிழக அரசுக்கு குமரி அனந்தன் பாராட்டு.

சென்னை,

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை தலைவருமான குமரி அனந்தன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

குமரி முனையில் வான் புகழ் வள்ளுவர் சிலை நிற்கும் பாறைக்கும், விவேகானந்தர் மணிமண்டபம் இருக்கும் பாறைக்கும் இடையே நடைபாலம் வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றுவதாக அறிவித்திருப்பது பெரும் பாராட்டுக்கு உரியது. சுற்றுலா பயணிகளுக்கு இது வரப்பிரசாதமாகும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story