சமூக வலைத்தளங்களை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர் - அமைச்சர் மனோதங்கராஜ்


சமூக வலைத்தளங்களை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர் - அமைச்சர் மனோதங்கராஜ்
x
தினத்தந்தி 31 Aug 2021 5:22 AM GMT (Updated: 31 Aug 2021 5:22 AM GMT)

சமூக வலைத்தளங்களை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர் என்று அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.

நெல்லை,

இது குறித்து நெல்லையில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோஜ் தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சமூக வலைத்தளங்கள் இன்று சில இடங்களில் மிக தவறான முறையில் சென்று கொண்டிருக்கிறது. சிலர் சமூக வலைத்தளங்களை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்.

தமிழக அரசை பொறுத்தவரையில் சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபடுபவர்களை இந்த அரசு பொறுத்துக் கொள்ளாது. ஆனால், இது தொடர்பான சட்டங்களை இயற்றுவது மாநில அரசின் கரங்களில் இல்லை. மத்தியில் அரசின் பொறுப்பில் தான் உள்ளது. எனவே, தமிழக அரசு மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த செயலையும் ஏற்றுக் கொள்ளாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story