தமிழகத்தில் மேலும் 1,575 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் மேலும் 1,575 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 Sep 2021 2:12 PM GMT (Updated: 4 Sep 2021 2:12 PM GMT)

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,568 இல் இருந்து 1,575 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1,61,231 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,575 ஆக உள்ளது. 

கொரோனாவில் இருந்து மேலும் 1,610 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,69,771 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,315 ஆக உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 17 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்தனர்.  கொரோனாவால் மேலும் 20 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,000 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் 239 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 244 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் 125 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 109 ஆக குறைந்துள்ளது.  செங்கல்பட்டில் 88 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 99 ஆக உயர்ந்துள்ளது. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story