மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவிகள் 5 பேருக்கு கொரோனா
மதுரை அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த 5 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மதுரை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த சூழலில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்தது. கடந்த 1ந்தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதேபோன்று மருத்துவ கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த 5 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, 2 மாணவிகள் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளனர். இதுதவிர, 3 பேர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story