தாம்பரம் ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை
தாம்பரம் ரெயில் நிலைய வாசலில் தனியார் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை
தாம்பரம் ரெயில் நிலையம் அருகே தனியார் கல்லூரி மாணவி ஒருவரும் ஒரு வாலிபரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது வாலிபர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்தினார். பின்னர் வாலிபர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். இதில் இருவரும் அங்கு ரெத்த வெள்ளத்தில் மிதந்தனர்.
உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் போலீசாருக்கும் ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மாணவி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். வாலிபர் நிலைமை தற்போது சீராக உள்ளது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் மாணவி பெயர் சுவேதா என்றும் வாலிபர் பெயர் ராமச்சந்திரன் என்பதும் தெரிய வந்து உள்ளது.
Related Tags :
Next Story