ஊரக உள்ளாட்சி தேர்தல் - 9 மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிப்பு


ஊரக உள்ளாட்சி தேர்தல் - 9 மாவட்டங்களில் பொது விடுமுறை  அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Sep 2021 3:10 PM GMT (Updated: 28 Sep 2021 3:10 PM GMT)

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வரும் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் பொது விடுமுறை விடப்படுவதாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9-ம் தேதியும் நடைபெறவுள்ளது. தேர்தல்  நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி  ஆகிய 9  மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 28 மாவட்ட தற்செயல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்  பகுதிகளுக்கு வரும்  9 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக ஊரக உள்ளாட்சி துறை அறிவித்துள்ளது. 

Next Story