மெகா தடுப்பூசி முகாம்; இதுவரை 14.56 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது


மெகா தடுப்பூசி முகாம்; இதுவரை 14.56 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 10 Oct 2021 11:08 AM GMT (Updated: 10 Oct 2021 11:08 AM GMT)

ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பல லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பல லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் 12-ந்தேதி தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இன்று 5-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சுமார் 30 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களில் இதுவரை 14.56 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story