தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 27 Oct 2021 8:02 AM GMT (Updated: 27 Oct 2021 8:02 AM GMT)

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வரும் 29 மற்றும் 30 ஆம் தேதி  ஆகிய 2 நாட்களில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

அதேபோல், 29,30,31 ஆகிய  3 நாட்கள் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழக மீனவர்கள் வரும் 27 ஆம் தேதி முதல் 30 வரை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story