தென் தமிழகத்தில் இந்த ஆண்டு பதிவான அதிகபட்ச மழை அளவு - எங்கு தெரியுமா?


தென் தமிழகத்தில் இந்த ஆண்டு பதிவான அதிகபட்ச மழை அளவு - எங்கு தெரியுமா?
x
தினத்தந்தி 26 Nov 2021 2:43 AM GMT (Updated: 26 Nov 2021 2:43 AM GMT)

தென் தமிழகத்தில் இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்ச மழை அளவு பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி,

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் நேற்று முதல் அதி கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், தென் தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான அதிகபட்ச மழை அளவு தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுவே தென் தமிழகத்தில் இந்த ஆண்டு பதிவான அதிகபட்ச மழை அளவாகும். அதேபோல், தூத்துக்குடியில், 26.6 சென்டிமீட்டரும், திருச்செந்தூரில் 24 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது.

Next Story