தமிழகம் முழுவதும் இன்று 13-வது மெகா தடுப்பூசி முகாம்


தமிழகம் முழுவதும் இன்று 13-வது மெகா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 3 Dec 2021 11:46 PM GMT (Updated: 3 Dec 2021 11:46 PM GMT)

தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 13-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

சென்னை, 

தமிழகம் முழுவதும் 13-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 

அந்தவகையில் இதுவரை தமிழகத்தில் 83 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர். தற்போது 1 கோடியே 30 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

அதேபோல் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று 200 வார்டுகளிலும் 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 2 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், கையிருப்பில் 11 லட்சத்து 83 ஆயிரத்து 905 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

சென்னையில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 704 பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அவர்களுக்கு இந்த முகாமில் முன்னுரிமை அளிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story