பூஸ்டர் தடுப்பூசி போட்டிருந்த நிலையில் நாராயணசாமிக்கு தொற்று பாதிப்பு உறுதி


பூஸ்டர் தடுப்பூசி போட்டிருந்த நிலையில் நாராயணசாமிக்கு தொற்று பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 15 Jan 2022 5:27 PM GMT (Updated: 15 Jan 2022 5:27 PM GMT)

பூஸ்டர் தடுப்பூசி போட்டிருந்த நிலையில் நாராயணசாமிக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி, ஜன.16-
பூஸ்டர் தடுப்பூசி போட்டிருந்த நிலையில் நாராயணசாமிக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று காலை அரசு மருத்துவ மனையில் கொரோனா பரிசோதனை செய்தார். இதன் முடிவு மாலை தெரியவந்தது. 
இதில் நாராயணசாமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அவர் எல்லையம்மன் கோவில்   தெருவில்  உள்ள வீட்டில் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார்.
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில், ‘எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி வீட்டில் என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள   வேண்டும்.  தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.  கடந்த 13-ந் தேதி நாராயணசாமி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Next Story