கஞ்சா விற்ற 3 பேர் கைது


தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தனபால் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கிருஷ்ணராஜபுரம் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த அற்புதராஜ் மகன் மைக்கேல்ராஜ் (வயது 27), மாயாண்டி மகன் விக்னேஷ் (22) மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story