மதுபாட்டில்கள் விற்ற 3 பேர் கைது


மதுபாட்டில்கள் விற்ற 3 பேர் கைது
x

தேனி அருகே வீரபாண்டி பகுதியில் மதுபானம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி அருகே வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வீரபாண்டி பகுதியில் மதுபானம் விற்ற உப்பார்பட்டி நடுத்தெருவை சேர்ந்த பாண்டியன் (வயது 57), தப்புக்குண்டு அண்ணா நகரை சேர்ந்த ஜோதிராஜ் (46), கோட்டூரை சேர்ந்த கல்யாணிதேவர் (70) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 39 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story