வீடு புகுந்து திருடிய 3 வாலிபர்கள் கைது


வீடு புகுந்து திருடிய 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே வீடு புகுந்து திருடிய 3 வாலிபர்கள் கைது 16 பவுன் நகைகள் மீட்பு

விழுப்புரம்

செஞ்சி

செஞ்சி அருகே உள்ள கஞ்சனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நரசிங்கனூர் கிராமத்தை சோ்ந்தவர் ஜெயராஜ் மகன் டான்கேரேஜ்(வயது 30). இவர் சம்பவத்தன்று வீ்ட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். பின்னா் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 16 பவுன் நகைகள், 2 எல்.இ.டி. டி.வி.கள் ஆகியவற்றை மர்ம மனிதர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் கஞ்சனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கஞ்சனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம் மற்றும் போலீஸ்காரர்கள் லட்சுமி நாராயணன், திருநாவுக்கரசு, செல்லப்பன், ஜெகதீசன் ஆகியோர் அனந்தபுரம் கூட்டுரோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். இதில் மேற்படி திருட்டில் அவர்கள் ஈடுபட்டிருந்ததும் நகைகள் மற்றும் டி.வி.க்களை கொள்ளை அடித்ததும் தெரியவந்தது. எனவே மேற்படி நபர்களான கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா வாணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த வீரப்பன் மகன் அருள்ராஜ் (வயது 25,) பயத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராமு 24, குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மகன் நல்லசிவம் 20 என்பதும் தெரியவந்தது. மேற்படி மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அவர்களிடமிருந்து 16 பவுன் நகைகள் மற்றும் இரண்டு எல்இடி டி.வி.க்களை கைப்பற்றினர்.


Next Story