ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 3,214 பேர் எழுதினர்


ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 3,214 பேர் எழுதினர்
x

நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 3,214 பேர் எழுதினர். 715 பேர் தேர்வுக்கு வரவில்லை.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 3,214 பேர் எழுதினர். 715 பேர் தேர்வுக்கு வரவில்லை.தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு மையங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத்தேர்வு நடந்தது. காலையில் முதன்மை எழுத்துத்தேர்வு, பிற்பகலில் தமிழ் தகுதி தேர்வு என 2 பகுதியாக இந்த தேர்வு நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் விவேகானந்தா கல்லூரியில் இதற்கான மையம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. காலையில் நடந்த தேர்வை எழுத 3,242 ஆண்கள், 687 பெண்கள் என மொத்தம் 3,929 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 715 பேர் தேர்வுக்கு வரவில்லை. மீதமுள்ள 3,214 பேர் தேர்வு எழுதினர்.

இதேபோல் பிற்பகலில் நடந்த தமிழ் தகுதி தேர்வை எழுத 3,631 ஆண்கள், 751 பெண்கள் என மொத்தம் 4,382 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 801 பேர் தேர்வு எழுத வரவில்லை. மீதமுள்ள 3,581 தேர்வு எழுதினர். இந்த தேர்வை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story