மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்


மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x

மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

இலுப்பூர் அருகே இடையப்பட்டி பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார் இடையப்பட்டி குளத்துவாரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 4 மாட்டுவண்டிகளை சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணல் கடத்தி வந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் அதன் உரிமையாளர்கள் இடையப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னக்கண்ணு (வயது 60), குமார் (40), கணேசன் (40), சின்னப்பன் (40) ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Related Tags :
Next Story