வங்கி ஊழியரை தாக்கிய 5 பேர் கைது
வங்கி ஊழியரை தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் வெங்கமேடு பகுதிக்குட்பட்ட கொங்கு நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 33). இவர் கரூரில் உள்ள வங்கி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மண்மங்கலத்தை சேர்ந்த அவிநாஸ் (27) என்பவர் அந்த வங்கியில் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அந்த கடனுக்கான தொகையை பெறுவதற்காக ராஜ்குமார் மண்மங்கலத்தில் உள்ள அவிநாஸ் வீட்டிற்கு சென்று, மாதத்தவணை தொகையை கேட்டுள்ளார். அப்போது அவிநாஸ் மற்றும் அவரது நண்பர்கள் ரமேஷ் (33), லோகநாதன் (34), ஜீவானந்தம் (39), சசிகுமார் (31) ஆகிய 5 பேரும் சேர்ந்து ராஜ்குமாரை தாக்கியதில் அவர் காயம் அடைந்தார். இதுகுறித்து ராஜ்குமார் ெகாடுத்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிந்து, அவிநாஸ் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story