அரளி விதையை அரைத்து சாப்பிட்டு பெண் தற்கொலை


அரளி விதையை அரைத்து சாப்பிட்டு பெண் தற்கொலை
x

அய்யலூர் அருகே அரளி விதையை அரைத்து சாப்பிட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்

அய்யலூர் அருகே உள்ள முடக்குப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 39). இவரது மனைவி பாக்கியலட்சுமி (30). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்தநிலையில் பாக்கியலட்சுமி கடந்த சில மாதங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று அரளி விதையை அரைத்து சாப்பிட்டார்.

இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியலட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Next Story