விஷத்தழை அரைத்து குடித்த வாலிபர் சாவு


விஷத்தழை அரைத்து குடித்த வாலிபர் சாவு
x

விஷத்தழை அரைத்து குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த அருங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன். இவரது மகன் சிவா என்கிற மணிகண்டன் (வயது 23) கூலி தொழிலாளி. இவர் கடந்த 30-ந் தேதி விஷச்செடியை அரைத்து குடித்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த இவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story