மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
x

பாளையங்கோட்டையில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.

திருநெல்வேலி

நெல்லை டவுனை சேர்ந்தவர் பொன்ராஜ். இவருடைய மகன் பிரகாஷ் நெல்சன் (வயது 32). இவர் நெல்லையில் தனது தந்தையுடன் காய்கறிக்கடை நடத்தி வந்தார்.

இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் நாசரேத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரி அருகே சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story