ஈரோடு இடைத்தேர்தல் பார்வையாளர் நியமனம்


ஈரோடு இடைத்தேர்தல் பார்வையாளர் நியமனம்
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பொதுப்பார்வையாளராக சிக்கிமை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு,

ஈரோடு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். இடைத்தேர்தல் இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் பல்வேறு அரசியில் கட்சியினர் ஈரோடு கிழக்கு தொகுதியில் குவிய தொடங்கி உள்ளனர். குறிப்பாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் முகாமிட்டு உள்ளனர். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பொதுப்பார்வையாளராக சிக்கிமை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல் பார்வையாளராக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சுரேஷ்குமார் சதிவேவ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story