மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு


மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
x

மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரூர்

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள உடையாபட்டியில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான போட்டி நடைபெற்றது. இதில் மேட்டுத்திருக்காம்புலியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கையுந்து பந்து, கேரம், பூப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இதையடுத்து சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சதீஷ், அமுதா ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் கனகராசு, ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story