மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது


மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது
x

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள வீர சங்கிலி மடம் கிராமத்தைச் சேர்ந்தவர் நவாஸ் கான் (வயது 34). இவரது மனைவி ஜெனிபர் நிஷா (34). நவாஸ் கான் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். ஆனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாததால் அவரது மனைவியும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்தநிலையில் கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஜெனிபர் நிஷா நம்புதாளையில் உள்ள தனது தாய் வீட்டில் கடந்த சில மாதங்களாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று நவாஸ்கான் அவரது மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது தான் கையில் வைத்திருந்த அரிவாளை வைத்து மனைவியை வெட்ட முயன்றபோது அவர் அவரிடமிருந்து தப்பித்து எதிர் வீட்டுக்குள் சென்று ஓடி ஒளிந்து கொண்டு உள்ளார். ஆனால் நவாஸ்கான் அவரை விரட்டி சென்று சரமாரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்து ஜெனிபர் நிஷா மயங்கி விழுந்தார். உடனே அவரை அவரது உறவி னர்கள் தொண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுதொடர்பாக ஜெனிபர் நிஷா தொண்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ் பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து நவாஸ்கானை கைது செய்தார்.


Related Tags :
Next Story