இலங்கைக்கு கடத்திய 575 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது


இலங்கைக்கு கடத்திய 575 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது
x

இலங்கைக்கு கடத்திய 575 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இலங்கை காரைநகர் கடல் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் சந்தேகப்படும்படியாக வந்த படகு ஒன்றை சோதனை செய்தனர்.

அப்போது அந்த படகில் சுமார் 575 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த இலங்கை கடற் படையினர் படகில் இருந்த யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த 2 பேரையும் பிடித்து ஊர்க்காவல் துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ. 40 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்றும் தமிழக கடல் பகுதி வழியாக இந்த கஞ்சா இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


Related Tags :
Next Story