அய்யனார் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


அய்யனார் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x

திருவெண்ணெய்நல்லூர் அருகே அய்யனார் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே அரும்பட்டு கிராமத்தில் புளியந்தோப்பு நடுவில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நேற்று முன்தினம் மர்மநபர்கள் புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணத்தை திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story