பா.ஜனதா கட்சியினர் தேசிய கொடி ஏந்தி பேரணி


பா.ஜனதா கட்சியினர் தேசிய கொடி ஏந்தி பேரணி
x

செங்கோட்டையில் பா.ஜனதா கட்சியினர் தேசிய கொடி ஏந்தி பேரணி நடத்தினர்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சி நகர இளைஞர் அணி சார்பில் 75-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் அனைவரும் கையில் தேசிய கொடி ஏந்தி பேரணி நடத்தினர். இந்த பேரணி தாலூகா அலுவலகம் முன்பு இருந்து புறப்பட்டது. இளைஞர ்அணித்தலைவர் வீரசிவா தலைமை தாங்கினார். நகர தலைவர் வேம்புராஜ். பொதுச்செயலாளர்கள் பாலகிருஷ்ணன், கோமதிநாயகம், ஒ.பி.சி. அணி மாவட்ட தலைவர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி நகர முக்கிய வீதிகளின் வழியாக சென்று பஸ்நிலையம் அருகில் இருக்கும் சுதந்திர போராட்ட தியாகி வாஞ்சிநாதன் சிலை முன்பு வந்தடைந்தது. அங்கு வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்புசாரா பிரிவு துணை தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட கூட்டுறவு பிரிவு செயலாளர் வர்மா தங்கராஜ், மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு துணைத்தலைவர் சென்பாகராஜன், நகர பொருளாளர் ராம்குமார், இளைஞரணி துணைத்தலைவர் அருண்சங்கர், பொதுச்செயலாளர் ஸ்ரீராம் கார்த்திக், செயலாளர்கள் முத்துக்குமார், மகாராஜன், பொருளாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story