பா.ஜனதா செயற்குழு கூட்டம்


பா.ஜனதா செயற்குழு கூட்டம்
x

ஸ்ரீவைகுண்டத்தில் பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

ஶ்ரீவைகுண்டம்:

பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கருங்குளத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பா.ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கனராஜ், ஓ.பி.சி அணி மாநில துணைத்தலைவர் ரமேஷ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராஜா, சிவமுருகன் ஆதித்தன், தரவு வேளாண்மை பிரிவு மாவட்ட தலைவர் கலைச்செல்வன், வணிகர் பிரிவு மாநில தலைவர் ராஜகண்ணன், கூட்டுறவு பிரிவு மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாணிக்கம், மாநில செயலாளர் மீனாதேவ் ஆகியோர் கட்சியின் வளர்ச்சி குறித்தும் தீர்மானங்கள் குறித்து பேசினர்.

கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனைைய விரிவாக்கம் செய்ய வேண்டும். திருச்செந்தூர்- பாலக்காடு எக்ஸ்பிரஸ் ெரயில் ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர் ஆகிய ெரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில இளைஞரணி செயலாளர் பூபதி பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் கனல் ஆறுமுகம், வீரமணி, சங்கர், அர்ஜூன் பாலாஜி, மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் நெல்லையம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story