தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல்


தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல்
x

கோத்தகிரி பகுதியில் தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்கி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி பகுதியில் தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்கி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கொப்புள நோய்

நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. 60 ஆயிரம் சிறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் மேகமூட்டமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனால் தேயிலை செடிகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்கி வருகிறது. இளம் தண்டு மற்றும் தேயிலை கொழுந்துகளை நோய் தாக்குகின்றன. இதனால் 50 சதவீதம் வரை மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே பச்சை தேயிலை கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்து உள்ள நிலையில், தேயிலை செடிகளில் கொப்புள நோய் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இத னால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

சூரிய வெளிச்சம்

இதுகுறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் கூறும்போது, தேயிலை செடிகளில் கொப்புள நோயை கட்டுப்படுத்த, தேயிலை தோட்டங்களில் உள்ள அதிக நிழல் தரும் மரங்கள் மற்றும் அதன் கிளைகளை அகற்ற வேண்டும். தேயிலை செடிகள் மீது சூரிய வெளிச்சம் படுமாறு செய்ய வேண்டும். செடிகளில் கொப்புள நோய் பாதிப்பது தெரியவந்தால், பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் கொழுந்துகளை கவாத்து மூலம் அகற்றிவிட வேண்டும்.

எக்ஸோ கன்சோல் 200 மில்லி மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் ஆகியவற்றின் கலவையை 7 நாட்கள் இடைவெளி விட்டு தெளிப்பான் மூலம் தேயிலை செடிகளுக்கு தெளிக்க வேண்டும். இதேபோல பிராப்பிகானாசோல் 125 மில்லி மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் கலவையை தெளிப்பான் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும் என்றனர்.


Next Story