அரசு பஸ் மோதியதில் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது


அரசு பஸ் மோதியதில் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது
x

சூளகிரி அருகே அரசு பஸ் மோதியதில் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே அரசு பஸ் மோதியதில் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

கார் மீது பஸ் மோதியது

சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 6 பேர் நேற்று பெங்களூருவில் இருந்து காரில் சென்னைக்கு சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சுண்டகிரி என்ற இடத்தில் சென்றபோது, அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று, காரின் பின்புறம் மோதியது.

இந்த விபத்தில், கார் நிலை தடுமாறி சாலையின் தடுப்பு சுவரில் மோதி 2 சாலைகளுக்கும் நடுவில் உள்ள 10 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் சென்ற தீபக் (வயது 26), சந்திரா (24), சுனிதா (25), கணபதி (20), கவிதா (25) மற்றும் நரேந்தர் (26) ஆகிய 6 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

தீவிர சிகிச்சை

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பள்ளத்தில் கிடந்த 6 பேரையும் மீட்டு சூளகிரியில் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்கள் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் சாய்ராம் கிருஷ்ணன் (37), கண்டக்டர் ஸ்டீபன் (35) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் மோதிய விபத்தில் கார் பள்ளத்தில் தலைப்புற கவிழ்ந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story