பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு


பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு
x

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

புதுக்கோட்டை

விராலிமலை,

விராலிமலை தாலுகா செவகாலபட்டி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் விராலிமலை சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா தொட்டியபட்டியை சேர்ந்த கருணாநிதி (வயது 54), கோவில்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (20), விராலிமலை மாதிரிபட்டி அண்ணா நகரை சேர்ந்த ராமையா (55), செல்லையா (59), இலுப்பூர் கோட்டை தெருவை சேர்ந்த கோபால் (23) ஆகியோரிடமிருந்து ரூ.2 ஆயிரத்து 450 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர்கள் 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story