108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது


108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது
x

108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஏ.புனவாசல் பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மனைவி மஞ்சுளா (வயது22). கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்உதவி சிகிச்சைக்கு பின்னர் 108 ஆம்புலன்சில் ஏற்றி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வரும் வழியில் சிக்கல் அருகே மஞ்சுளாவிற்கு திடீரென்று பிரசவ வலி அதிகமானது. இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்சு அவசரகால மருத்துவ உதவியாளர் கார்த்திக், முதலுதவி பயிற்சி பெற்ற டிரைவர் வாழவந்தராஜா ஆகியோர் ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்த்தனர். மஞ்சுளாவிற்கு 108 ஆம்புலன்சிலேயே அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருந்த நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆம்புலன்சில் வைத்து உரிய காலத்தில் சிகிச்சை அளித்து நலமுடன் பெண் குழந்தை பெற உதவி ஆம்புலன்சு பணியாளர்களை முத்துராமலிங்கம் மற்றும் ஊர்பொதுமக்கள், 108 ஆம்புலன்சு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் பாராட்டினர்.


Next Story