ரூ.60¾ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்


ரூ.60¾ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
x
திருப்பூர்


வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமையன்று தேங்காய் பருப்பும், வியாழக்கிழமையன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்துகொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

அதன்படி நேற்று 158 விவசாயிகள் கலந்துகொண்டு 83 ஆயிரத்து 489 கிலோ தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 17 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.82.70-க்கும், குறைந்தபட்சம் ரூ.60.15-க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.60 லட்சத்து 88 ஆயிரத்து 15-க்கு வணிகம் நடைபெற்றது.

இந்த தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.


Next Story