தூத்துக்குடியில் 42 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்
தூத்துக்குடியில் 42 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்
தூத்துக்குடி
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சென்னை தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் ஆகியவை இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி 42 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் மண்டல மேலாளர் முரளி, மீளவிட்டான் சேமிப்பு கிடங்கு மேலாளர் ராஜஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story