தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அரியலூர்
சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனியங்குறிச்சி கிராமத்தில் சின்ன ஏரி ஒன்று முதன்மைச் சாலையில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கரை மற்றும் ஏரியின் உள் பகுதி முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் மழைபெய்யும்போது ஏரியில் மழைநீர் தேங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், முனியங்குறிச்சி, அரியலூர்.
Related Tags :
Next Story