வெவ்வேறு விபத்துகளில் தொழிலாளி உள்பட 2 பேர் சாவு


வெவ்வேறு விபத்துகளில் தொழிலாளி உள்பட 2 பேர் சாவு
x

காவேரிப்பட்டணம், ஓசூரில்வெவ்வேறு விபத்துகளில் தொழிலாளி உள்பட 2 பேர் இறந்தனர்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம், ஓசூரில்வெவ்வேறு விபத்துகளில் தொழிலாளி உள்பட 2 பேர் இறந்தனர்.

தொழிலாளி

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அசோகன். இவருடைய மகன் சுகன் (வயது 27). தச்சு தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

நரிமேடு மேம்பாலம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் சுகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லாரி மோதியது

ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் பிரகாஷ் (21). சம்பவத்தன்று இவர் ஓசூர் அலசநத்தம் சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். தனியார் பள்ளி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த மினி டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இந்த விபத்தில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story