வெவ்வேறு சாலை விபத்தில் 2 பேர் சாவு


வெவ்வேறு சாலை விபத்தில் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 14 Jan 2023 10:59 AM GMT)

பாகலூர் அருகே வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் இறந்தனர்.

கிருஷ்ணகிரி

பாகலூர் அருகே வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் இறந்தனர்.

தொழிலாளி

ஓசூர் தாலுகா பாகலூர் அருகேயுள்ள பெலத்தூர் ஜீவா நகரை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 55). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று அவர், மாலூர்-பாகலூர் சாலையில் பெட்ரோல் நிலையம் அருகில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் முருகேஷ் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முருகேசை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகேஷ் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கட்டிட மேஸ்திரி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா செட்டிப்பள்ளி பக்கமுள்ள கிருஷ்ணன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (44). கட்டிட மேஸ்திரி. இவரும் ஜோதிப்பட்டியை சேர்ந்த சகாதேவன் (50) என்பவரும் சம்பவத்தன்று மோட்டார்சைக்கிளில், பாகலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் அருகில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். சகாதேவன் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story